HomeNewsKollywoodகுழந்தைகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்

குழந்தைகளுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்

தமிழ் திரையுலகில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரின் திருமணம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு அதாவது இவர்கள் திருமணம் நடைபெற்று நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலேயே தாங்கள் இரட்டைகுழந்தை பெற்றுள்ளதாக நயன்-விக்கி தம்பதியினர் அறிவித்து பரபரப்பை கிளப்பினர்

மேலும் தங்களது குழந்தைகளுக்கு உயிர் உலகம் என பெயரிட்டு உள்ளனர் அவ்வப்போது தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்

இந்த நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை இப்போது இருந்தே துவங்கியுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் அதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு வேஷ்டி அணிவித்து அலங்கரித்து அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் இதற்கு தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments