HomeNewsKollywoodயார் இந்த அரியவன் ?

யார் இந்த அரியவன் ?

யாரடி நீ மோகினி படத்தில் ஆரம்பித்து குட்டி, உத்தமபுத்திரன், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் வரை தனுஷை வைத்தே படங்களை இயக்கி வந்த, அவரது ஆஸ்தான இயக்குனர் மித்ரன் ஜவஹர் தற்போது ஈசான் என்பவரை அறிமுக நாயகனாக வைத்து அரியவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை பிரணாலி நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் கிரி நந்த் இருவரும் இசையமைத்துள்ளனர்.

வரும் மார்ச் மூன்றாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. அதாவது திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து சத்தம் காட்டாமல் இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் மித்ரன் ஜவஹர் என்று தெரிகிறது. சமீபத்தில் இந்த படத்திற்காக நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

படத்தின் கதை பற்றி கதாசிரியர் மாரி செல்வன் கூறும்போது “உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே பெண்கள் மீதான வன்முறை இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதை மாற்ற நம் மனங்கள் மாற வேண்டும். ஒரு கதையில் எந்த கருத்தும் சொல்லக்கூடாது, அட்வைஸ் பண்ண கூடாது என்கிற எண்ணத்தில் எழுதியது தான் இந்த கதை என்று கூறினார்.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கிய உத்தமபுத்திரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இயக்குனர் பாக்யராஜ். அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியபோது இயக்குனர் மித்ரனுடன் உத்தமபுத்திரன் படத்தில் வேலை பார்த்துள்ளேன். மிக நல்ல மனிதர். சாந்தமானவர்.

அவர் புதுமுகத்தை வைத்து எடுக்கிறார் என்றால் கண்டிப்பாக கதை மிக நல்ல கதையாக இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. புது ஹீரோவை வைத்து தைரியமாக படம் எடுத்த தயாரிப்பாளர் நவீனுக்கும் நன்றி” என்று வாழ்த்தினார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments