HomeNewsKollywoodசூர்ப்பனகையின் மொத்த உரிமையையும் கைப்பற்றிய எஸ்பி சினிமாஸ்

சூர்ப்பனகையின் மொத்த உரிமையையும் கைப்பற்றிய எஸ்பி சினிமாஸ்

போலீஸ் படங்களிலேயே வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சில படங்கள் வெளியாகி இப்படியும் கூட போலீஸ் கதைகளை எடுக்கலாமா என்று ஆச்சரியப்பட வைத்திருக்கின்றன. அப்படி வெளியான வெகு சில படங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான திருடன் போலீஸ் படமும் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கியிருந்தார். அந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அவர் அதைத் தொடர்ந்து மீண்டும் அட்டகத்தி தினேஷை வைத்து உள்குத்து என்கிற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது அவர் சூர்ப்பனகை என்கிற பெயரில் பேண்டஸி பீரியட் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இதில் கதையின் நாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தில் மேலும் மன்சூர் அலிகான், ஜே, பிக் பாஸ் புகழ் அப்சரா கவுடா உள்ளிட்ட பலர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.

1920 களில் நிகழ்வது போலவும் மற்றும் தற்காலத்தில் நிகழ்வது போலவும் இந்த கதை நிகழ்கிறது என்பது படத்தின் போஸ்டரை வைத்து பார்க்கும்போது தெரிகிறது. நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் என இரண்டு கதைகலிலுமே ரெஜினா தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத அனைத்து உரிமைகளையும் பிரபலமான எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தற்போது கைப்பற்றி உள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments