நடிகர் விஷால் தனது ஒவ்வொரு படத்திற்கும் உயிரை கொடுத்து நடிக்க தயங்காதவர். எல்லா படங்களுக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் ஒரே விதமான உழைப்பை கொடுக்கக் கூடியவர். அதேசமயம் கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்கள் எல்லாமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் ஏதோ ஒரு விதத்தில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தவறின.
இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நாளை (செப்-15) வெளியாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா இன்னொரு முக்கிய வேடத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க, தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த படம் ரிலீஸுக்கு முன்னதாக ஏற்பட்ட சில சிக்கல்களை எல்லாம் கடந்து வெற்றிகரமாக நாளை வெளியாகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தனது சோசியல் மீடியாவில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் விஷால்.
இது குறித்து அவர் கூறும்போது, “கடின உழைப்பு, ரத்தம், இனிப்பு, வலி, கடந்த ஒரு வருடமாக சாவு வரை அருகில் சென்று வந்த காயங்கள் என்னிடம் மட்டுமல்ல மார்க் ஆண்டனி பட குழுவினர் அனைவரிடமிருந்துமே கிடைத்தன. கிட்டத்தட்ட இந்த டைம் ட்ராவல் கேங்ஸ்டர் படத்தை செப்டம்பர் 15ஆம் தேதி காட்டுவதற்கு தயாராகி விட்டோம்.
உலகெங்கிலும் நான் எப்போதுமே இரண்டு கடவுள்களை நம்புவேன். அதில் ஒன்று எப்போதுமே நான் நம்பிக்கையுடன் என்னை ஒப்படைத்து மிகப்பெரிய தரிசனம் செய்யும் திருப்பதி ஏழுமலையான். இன்னொன்று திரையரங்குகளில் கடந்த 19 வருடங்களாக எனது படங்களை தொடர்ந்து பார்த்து ரசித்து வரும் ரசிகர்கள். இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் கொடுக்கும் ஒவ்வொரு காசுக்கும் ஒர்த் ஆனதாக இருக்கும் என உறுதியாக கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்