V4UMEDIA
HomeNewsKollywoodஜிகர்தண்டா டபுள்-எக்ஸ் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான்

ஜிகர்தண்டா டபுள்-எக்ஸ் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் தனது தந்தையைப் போல வெறும் நடிப்பு மட்டுமே என நின்று விடாமல் இன்னொரு பக்கம் வே பாரர் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக படங்களை தயாரித்தும் நல்ல படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில் தற்போது தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுளக்ஸ் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை துல்கர் சல்மான் கைப்பற்றியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இருவரும் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்துள்ளனர், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது,

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் அதே பாணியிலான கதையை வேறு ஒரு தளத்தில் வைத்து இந்த ஜிகர்தண்டா டபுளக்ஸ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளாராம்.

வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இந்த படம் ஜிகர்தண்டா முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய வரவேற்பு பெறும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

Most Popular

Recent Comments