V4UMEDIA
HomeNewsKollywoodவிஜய் ஆண்டனி எடுத்துள்ள புதிய முடிவு ; நெகிழ வைக்கும் அறிவிப்பு

விஜய் ஆண்டனி எடுத்துள்ள புதிய முடிவு ; நெகிழ வைக்கும் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக நுழைந்து நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர்,  இயக்குனர் என பல்வேறு விதமான பிரிவுகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி  வரிசைக்கு உயர்ந்து வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. 

இவர் நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வரும் அக்டோபர் ஆறாம் தேதி வெளியாக இருக்கிறது.  அந்த படத்தின் வேலைகளில்,  மற்ற படங்களின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த விஜய் ஆண்டனிக்கு இடி இறங்கியது போல அவரது மகள் மீரா எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு  அமைந்துவிட்டது.

12 வது படிக்கும் தனது மகள் இப்படி தங்களை விட்டு இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவாள் என எதிர்பாராத விஜய் ஆண்டனி ரொம்பவே மனம் உடைந்து விட்டார். ஏற்கனவே அவர் பல மேடைகளில் பேசும்போது  தற்கொலை எண்ணத்திற்கு எதிரான கருத்துகளையே கூறி வந்துள்ளார்.

அப்படிப்பட்டவரின் வீட்டிலேயே இப்படி ஒரு  துயரமான நிகழ்வு நடந்து விட்டது எதிர்பாராத ஒன்று தான். ரசிகர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் நண்பர்களும் எத்தனையோ விதமாக ஆறுதல் கூறினாலும் அதிலிருந்து அவர் எப்படி வெளியேறி வரப்போகிறார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்த நிலையில் தனது மகள் குறித்தும் தனது உணர்வுகள் குறித்தும்  உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

அந்த அறிக்கையில் அவர் கூறும்போது, “அன்பு நெஞ்சங்களே.. என் மகள் மீரா மிகவும் அன்பானவள்.. தைரியமானவள்.. அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த, ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்.. அவளுடன் நானும் இறந்து விட்டேன்.. நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்..  அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என்று கூறியுள்ளார். 

Most Popular

Recent Comments