V4UMEDIA
HomeNewsKollywoodதேனி கலெக்டரிடம் இயக்குனர் சீனுராமசாமி புத்தகம் கொடுத்தாரா ? புகார் கொடுத்தாரா ?

தேனி கலெக்டரிடம் இயக்குனர் சீனுராமசாமி புத்தகம் கொடுத்தாரா ? புகார் கொடுத்தாரா ?

தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான, மனிதர்களின் மனதிற்கு மிக நெருக்கமான படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் சீனுராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த நிலையில் தற்போது  தனது ஒன்பதாவது படமாக உருவாகும்  கோழிப்பண்ணை செல்லத்துரை  என்கிற படத்தை இயக்கி வருகிறார்  சீனுராமசாமி.

விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து, ஏகன்  கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. படப்பிடிப்பு தளங்களை பார்வையிட வந்த இயக்குனர் சீனு ராமசாமி மரியாதை நிமித்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அவர்களை நேரில் சந்தித்தார்.

அப்போது தான் எழுதிய ‘புகார் பெட்டியின் மீது படுத்து உறங்கும் பூனை’ என்னும் கவிதை நூலை நினைவு பரிசாக வழங்கி பல சீர்மிகு பணிகளால் தேனி மாவட்ட மக்களின் அன்பை பெற்ற பெண் கலெக்டரை வாழ்த்தினார் சீனுராமசாமி.

Most Popular

Recent Comments