V4UMEDIA
HomeNewsKollywoodஅனிருத்தையும் தேடி வந்த அன்பு பரிசு 

அனிருத்தையும் தேடி வந்த அன்பு பரிசு 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று  வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது வரை  ரசிகர்கள் என்று மட்டுமல்லாமல் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை  தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள இந்த படம் இன்னும் பல வசூல் சாதனைகளை படைக்க இருக்கிறது.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான  இந்த படம் அவர்களது திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களுக்கு  முதன்முறையாக நன்றி கடன் செலுத்தும் பணியில்  இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மற்றும் படத்தின் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார் மற்றும்  படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பங்குத்தொகைக்கான காசோலை என பரிசளித்து  தங்களது  நன்றிக்கடனை செலுத்தினர்.

அந்த சமயத்திலேயே  ஹீரோவுக்கும் இயக்குனருக்கு மட்டும் தான் பரிசா, இந்த படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு எந்த பரிசும் இல்லையா என  குதர்க்கமாக சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். அதே சமயம் அவர்களை எல்லாம் வாயடைக்க செய்யுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனம்  அணிருத்திற்கும் அதே போன்ற விலை உயர்ந்த கார் மற்றும்  லாபத்தில் பங்குத்தொகை என கொடுத்து  அசத்தியுள்ளது.

Most Popular

Recent Comments