V4UMEDIA
HomeNewsKollywoodசம்மன் அனுப்பப்பட்டதா ? ; நடிகை வரலட்சுமி விளக்கம்

சம்மன் அனுப்பப்பட்டதா ? ; நடிகை வரலட்சுமி விளக்கம்

நடிகை வரலட்சுமியிடம் மேலாளராக சில வருடங்களுக்கு முன்பு பணி புரிந்தவர் ஆதி லிங்கம். சமீபத்தில் இவர் கேரளாவில் விழிஞம் துறைமுகத்தின் வாயிலாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தியதாக என் ஐ ஏ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து இவர் இப்படி முறையற்ற வகையில் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார் என்றும் இதில் சினிமாவை சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் தொடர்பு உண்டா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு என் ஐ ஏ போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் மீடியாக்களில் வெளியானது. இந்த நிலையில் அதுகுறித்து மறுப்பு தெரிவித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார் வரலட்சுமி.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ப்ரீலான்ஸ் மேனேஜராக இருந்தவர் ஆதிலிங்கம். என்னை போலவே வேறு சிலருக்கும் அவர் இப்படி பணியாற்றி வந்தார். என்னிடமும் இதுபோன்று வேறு சிலர் ப்ரீலான்ஸ் மேனேஜர்களாக பணியாற்றினர். இந்த ஆதிலிங்கம் ஐந்து வருடங்களுக்கு முன்பே அவர் என்னிடமிருந்து நின்று விட்டார்.

அதே சமயம் இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகமாறு எனக்கு என் ஐ ஏவிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையையும் இல்லை. என் தாயிடம் மட்டுமே இது பற்றி விசாரித்துள்ளனர். அப்படி சம்மன் அனுப்பினாலும் அரசுக்கு ஒத்துழைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. தேவை இல்லாமல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்

Most Popular

Recent Comments