V4UMEDIA
HomeNewsKollywoodநியூயார்க்கில் சமந்தாவுக்கு கிடைத்த கவுரவம்

நியூயார்க்கில் சமந்தாவுக்கு கிடைத்த கவுரவம்

அமெரிக்காவில் நியூயார்க்கில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் இந்தியா ப்ரைட் டே என கொண்டாடி வருகிறார்கள். கடந்த 40 வருடங்களாக இந்த நிகழ்வு வருடந்தோறும் ஆகஸ்ட் 20ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா இதில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏந்தியபடி நியூயார்க் வீதிகளில் வலம் வந்தார்.

இது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ள சமந்தா கூறும்போது, “இன்று இங்கு இருப்பது உண்மையான கவுரவம் இந்திய கலாச்சாரம், இந்திய பாரம்பரியம் எவ்வளவு சிறந்தது என்பதை நீங்கள் புரியும்படி செய்தீர்கள்

இன்று நான் பார்த்த இந்த கணங்கள், வாழ்நாள் முழுதும் மனதில் நிலைத்து நின்றுவிடும். இந்த அரிய கௌரவம் எனக்கு கிடைக்கும்படி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி. என் ஒவ்வொரு படத்தையும் ஆதரிக்கும் அமெரிக்க மக்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments