V4UMEDIA
HomeNewsKollywoodகிருத்திகா ஜெயம் ரவி படப்பிடிப்பு துவங்கியது

கிருத்திகா ஜெயம் ரவி படப்பிடிப்பு துவங்கியது

பொன்னியின் செல்வனுக்கு முன், பொன்னியின் செல்வனுக்கு பின் என ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தை இரண்டாக பிரிக்கும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுக் தந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஏற்கனவே ஒப்புக்கொண்ட இறைவன், சைரன், ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்து நடித்து முடித்து விட்டார் ஜெயம் ரவி.

இதைத்தொடர்ந்து கிருத்திகா உதயநிதி டைரக்சனில் புதிய படம் ஒன்றில் அவர் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்த படத்தில் முதன்முறையாக ஜெயம் ரவியுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கிறார் நித்யா மேனன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி தனி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments