பாலிவுட் நடிகர் அக்சய் குமார் டெல்லியில் பிறந்திருந்தாலும் அவர் கனடாவில் வளர்ந்ததால் கனடா மற்றும் இந்தியா என இரண்டு நாடுகளிலும் இரட்டை குடியுரிமை பெற்றவர் அதே சமயம் கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் வாக்களிக்காதது குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/08/akshay.jpg)
அவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் வாக்களிப்பதில் அலட்சியம் காட்டினார் என்றும் சொல்லப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அக்சய் குமார், நான் கன்னட குடியுரிமை பெற்றவன் என்பதை எப்போதுமே மறைத்ததில்லை. அதே சமயம் கனடாவிற்கு சென்றே ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. நான் எப்போதும் இந்திய நாட்டின் குடிமகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/08/akshay-kumar-2-1-576x1024.jpg)
அதை தொடர்ந்து இந்த சமயத்தில் அவர் அளித்த பேட்டியில், தான் கன்னட குடியுரிமையை விட்டு விலகுவதற்காக இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறியிருந்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/08/akshay-kumar-1-1-768x1024.jpg)
இந்த நிலையில் அவருக்கு தற்போது இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது இது குறித்த ஆவணங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் அக்சய் குமார்