V4UMEDIA
HomeNewsKollywoodஹீரோயின்கள் விஷயத்தில் எனக்கு அநீதி நடக்கிறது ; விஜய் ஆண்டனி ஜாலியான குற்றச்சாட்டு

ஹீரோயின்கள் விஷயத்தில் எனக்கு அநீதி நடக்கிறது ; விஜய் ஆண்டனி ஜாலியான குற்றச்சாட்டு

விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் கொலை. இயக்குனர் பாலாஜி குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங் நடித்துள்ளனர். இந்த மீனாட்சி சவுத்ரி அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

கொலை படம் வரும் ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து தனக்கு அநீதி அளிக்கப்பட்டு வருவதாக கூறியதுடன் தனக்கு நீதி வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். அப்படி என்ன அவருக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று கேட்கிறீர்களா ? இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்.

 “பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது. கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என சொன்னார்கள். பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல! எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும்.

ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் பாலாஜி, எலோன் மஸ்க் தங்கச்சியின் நண்பர் என்பதால் சீக்கிரம் எலான் நம் தமிழ் சினிமாவில் படம் தயாரிக்க வாய்ப்பிருக்கிறது. இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பாக வந்துள்ளது.

மீனாட்சி அடிப்படையில் மருத்துவர், இப்போது ஐஏஎஸ் படித்து வருகிறார். அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ஆர்யாவுக்கு நன்றி” என்று கூறினார்

Most Popular

Recent Comments