HomeNewsKollywoodகதையின் நாயகியாக ரேகா நடிக்கும் மிரியம்மா

கதையின் நாயகியாக ரேகா நடிக்கும் மிரியம்மா

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேகா. முதல் படத்திலேயே வெற்றி பெற்ற இவர் அதைத் தொடர்ந்து ராமராஜன் படங்களில் அவருக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

அதன்பிறகு கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மிரியம்மா என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் ரேகா. இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்று படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

இந்த படத்தை மாலதி நாராயணன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் மேலும் அனிதா சம்பத், எழில்துரை, சினேகா குமார், விஜே ஆஷிக் ஆகியோருடன் மாலதி நாராயணனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர் ரஹைனா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்,

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments