V4UMEDIA
HomeNewsKollywoodகேஜிஎஃப் இயக்குனர் சோசியல் மீடியாவை விட்டு வெளியேறியது ஏன் ?

கேஜிஎஃப் இயக்குனர் சோசியல் மீடியாவை விட்டு வெளியேறியது ஏன் ?

கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது இந்தியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கன்னட திரை உலகின் வியாபார வாசலை அகலமாக திறந்துவிட்ட படம் என்றால் அது கேஜிஎஃப் திரைப்படம் தான்.

அதன்பிறகு வெளியான அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி இருந்தார்.

இந்த இரண்டு பாகங்களில் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் சலார் படத்தின் அப்டேட் குறித்து இயக்குனரிடம் அடிக்கடி சோசியல் மீடியாவில் கோரிக்கை வைத்து வந்தனர்.

அதே சமயம் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் தான் முதலில் வெளியாக இருக்கிறது என்பதால் அதுகுறித்த புரமோஷன் செய்திகள் தான் தற்போது வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த படத்தை விட பிரபாஸ் ரசிகர்கள் சலார் படத்தை தான் அதிகம் எதிர்பார்க்கிறார். அந்த படத்தின் அப்டேட் குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.

அப்படி சலார் படத்தின் அப்டேட் கொடுத்தால் அது ஆதிபுருஷ் படத்தின் பிரமோஷனை பாதிக்கும் என்பதாலேயே தனது பட அப்டேட் எதுவும் கொடுக்காமல் இருந்தார் பிரசாத் நீல். இந்த நிலையில் ரசிகர்களின் நச்சரிப்பு அதிகமாகவே தற்காலிகமாக தனது ட்விட்டர் கணக்கை முடக்கி விட்டு சோசியல் மீடியாவை விட்டு வெளியேறியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்

Most Popular

Recent Comments