V4UMEDIA
HomeNewsKollywoodதிருப்பதி சென்று நேர்த்திக்கடன் செலுத்தியதால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்த படம்

திருப்பதி சென்று நேர்த்திக்கடன் செலுத்தியதால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்த படம்

சமீப நாட்களாகவே ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இன்னொரு பக்கம் அவர் குறித்த சர்ச்சை செய்திகளும் பஞ்சமில்லாமல் வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் நடித்த ஃபர்ஹானா திரைப்படம் வெளியாகி பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வாரம் அவர் நடித்துள்ள தீராக் காதல் என்கிற படம் வெளியாக இருக்கிறது. அதே கண்கள் என்கிற படத்தை இயக்கிய ரோஹின்  வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெய் நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகியாக நடிகை ஷிவதா நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்தது குறித்து ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அது பற்றி அவர் கூறும்போது, “எல்லா கதைக்கு பின்னாடியும் சில கதைகள் இருக்கும். அதேபோல் எனக்கும் இயக்குனர் ரோஹினுக்கும் இரண்டு வருட கதை உண்டு. நாங்கள் பல நாட்களுக்கு முன்னேயே படம் பண்ண வேண்டியது. எங்களின் கதையை கேட்டு லைகா நிறுவன தமிழ்க்குமரன் சார் இரவு 11 மணிக்கு போன் செய்து கதை நன்றாக இருப்பதாக சொன்னார். அது பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.

ஆனால் அந்த படம் தாமதமாகவே, எப்படியாவது இந்த படம் நடக்க வேண்டும் என திருப்பதி மலையேறி நேர்த்திக்கடன் செலுத்தினோம். அங்கு இருந்தபோது அதிசயம் நிகழ்ந்தது.. தமிழ்க்குமரன் சார் இந்த படம் செய்யலாம் என கூறிய செய்தி வந்தது. இந்த படம் மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை தரும்” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments