HomeNewsKollywoodஅல்போன்ஸ் புத்ரன் பட ஆடிசனுக்கு குவிந்த கூட்டம்

அல்போன்ஸ் புத்ரன் பட ஆடிசனுக்கு குவிந்த கூட்டம்

மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான பிரேமம் படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் படம் எதுவும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் கடந்த வருடம் பிரித்திவிராஜ், நயன்தாரா இருவரும் நடித்த கோல்ட் என்கிற படத்தை இயக்கினானர். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியானாலும் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது தமிழில் தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். ஏற்கனவே நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், முதலான படங்களை தயாரித்துள்ளது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தான். தற்போது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் முற்றிலும் புது முகங்களை நடிக்க வைக்க இருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன் இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் ஆடிசனில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு சோசியல் மீடியா மூலமாக அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று இந்த ஆடிசனில் கலந்து கொள்ள இளைஞர்கள் முதல் 50 வயது வரை உள்ளவர்கள் வரை என நூற்றுக்கணக்கான பேர் வரிசை கட்டி நின்றனர்.

மலையாள இயக்குனராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமானவர் என்பதால் அவரது படத்தில் நடிக்க இவ்வளவு கூட்டம் அலைமோதியுள்ளது.

குறிப்பாக நஸ்ரியா, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என நான்கு முன்னணி கதாநாயகிகளை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் என்பதாளும் பெண்கள் கூட்டமும் அதிகமாக கூடியுள்ளது என தெரிகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments