HomeNewsKollywoodஈகா படத்திலேயே நான் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டேன் சமந்தா குறிப்பிட்டது எதை ?

ஈகா படத்திலேயே நான் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டேன் சமந்தா குறிப்பிட்டது எதை ?

புராண மற்றும் வரலாற்று படங்களில் நடிக்கும் விருப்பம் எல்லா முன்னணி நடிகைகளுக்குமே இருக்கும். அந்த வகையில் சமந்தாவுக்கு முதன்முதலாக அந்த வாய்ப்பு தற்போது சாகுந்தலம் என்கிற படத்தின் மூலமாக அமைந்துள்ளது. புராண இதிகாச காவியமான சாகுந்தலம் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா.

பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொண்டு வருகிறார் சமந்தா.

அப்படி அவர் கூறும்போது, “இந்த படம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஒடும் என்றால் அதில் இரண்டு மணி நேரத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த அளவிற்கு இந்த படத்தில் பிரம்மாண்டம் காட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

வரலாற்று படம் என்பதாலும் கிராபிக்ஸில் நிறைய வேலைகள் படப்பிடிப்பிற்கு பின்னால் தான் செய்யப்பட்டன என்பதாலும், படப்பிடிப்பின்போது எதிரில் இல்லாத ஒன்றை எப்படி அவர் கற்பனை செய்து நடிக்க முடிந்தது என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சமந்தா, “ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஈகா படத்திலேயே நான் நிறைய கற்றுக்கொண்டு எக்ஸ்பர்ட் ஆகிவிட்டேன். அதனால் இதில் நடிக்கும்போது எனக்கு எளிதாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, மதுபாலா, கௌதமி, கபீர் பேடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments