HomeNewsKollywoodமாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் பொறுப்பேற்ற வரலட்சுமி

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் பொறுப்பேற்ற வரலட்சுமி

நடிகை வரலட்சுமிக்கு தமிழில் கைவசம் நிறைய படங்கள் இருந்தாலும் அதைவிட அதிக அளவில் தெலுங்கில் தான் நடித்து வருகிறார். காரணம் தெலுங்கில் அவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக வித்தியாசமான, கொஞ்சம் கனமான கதாபாத்திரங்கள் கொடுத்து அழகு பார்க்கின்றனர், அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னடம், தெலுங்கில் வெற்றி பெற்ற ஒரு படத்தை கொன்றால் பாவம் என்கிற பெயரில் ரீமேக் செய்து தமிழில் வெளியிட்டனர், இந்த படத்தின் கதாநாயகியாக வரலட்சுமி நடித்திருந்தார்,

ஏற்கனவே பலமுறை வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவர் ஏற்றிருந்த அப்பாவி கிராமத்து பெண் வேடத்தில் கூட அடப்பாவி என்று சொல்லும் விதமாக வில்லத்தனம் காட்டி நடித்திருந்தார் வரலட்சுமி.

இந்த படத்தை தயாள் பத்மநாபன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பணியாற்றியபோது இயக்குனரின் திறமையோ அல்லது அவர் அடுத்ததாக சொன்ன கதையோ அல்லது இது இரண்டுமோ வரலட்சுமிக்கு பிடித்து போய்விட்டதால் அவர் அடுத்த இயக்கிவரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் வரலட்சுமி.

இந்த படத்திற்கு மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டிலுக்கு ஏற்றபடி இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. கதாநாயகனாக பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கிறார். இவரும் படத்தில் போலீஸ் அதிகாரியாக தான் நடித்துள்ளார். இந்த படத்தை ஆஹா ஒரிஜினல் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments