V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்

சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக ஒரே நேரத்தில் வெற்றிகரமான இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்கள் மனதில் நுழைந்தவர் சசிகுமார். அதை தொடர்ந்து அவர் ஈசன் என்கிற படத்தை இயக்கினாலும் கூட திரை உலகில் உள்ள பல படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் ஏன் ரசிகர்களும் கூட ஒரு கதாநாயகனாகவே பார்க்க விரும்பினார்.

இதனால் டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு தற்போது வரை பிஸியான நடிகராக நடித்து வருகிறார் சசிகுமார். இடையில் சில படங்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான அயோத்தி திரைப்படம் சசிகுமாரின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தி உள்ளது.

தற்போது வரை வெற்றிகரமாக 25வது நாளை தொட்டுள்ளது அயோத்தி திரைப்படம். அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற இந்த படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் டைரக்சன் பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளார் சசிகுமார்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு அவர் டைரக்ஷனில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments