HomeNewsKollywood20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிம்ரன்-லைலா

20 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிம்ரன்-லைலா

ஈரம் என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் அறிவழகன், நடிகர் ஆதி மீண்டும் சப்தம் என்கிற படத்திற்காக இணைந்துள்ளனர். ஈரம் படத்தைப் போலவே இந்த படமும் ஹாரர் திரில்லராக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக செலெக்ட்டிவ்வான படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை லைலா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சிம்ரன் இணைந்துள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது தான்.

 கடந்த 2000ல் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் படத்தில் கதாநாயகியாக வில்லித்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் சிம்ரனும் இணைந்து நடித்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து 2003ல் வெளியான பிதாமகன் படத்தில் லைலா கதாநாயகியாக நடிக்க சிம்ரன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அந்த பாடலில் இருவரும் பங்கு பெற்றிருந்தாலும் இணைந்து தோன்றும்படியான காட்சிகள் இல்லை.

இந்த நிலையில் தான் தற்போது 20 வருடங்களுக்கு கழித்து இந்த படத்திற்காக இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments