HomeNewsKollywoodதுபாயில் நடைபெறும் ராவண கோட்டம் இசை வெளியீட்டு விழா

துபாயில் நடைபெறும் ராவண கோட்டம் இசை வெளியீட்டு விழா

மதயானை கூட்டம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அந்த படத்தின் மூலம் நடிகர் கதிரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

இந்த நிலையில் தற்போது அவர் சாந்தனுவை கதாநாயகனாக வைத்து இராவண கோட்டம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

துபாயில் உள்ள மிகப்பெரிய கேஆர்ஜி குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதன் மூலமாக முதன்முறையாக சினிமாவிலும் அடி எடுத்து வைத்துள்ளது. கண்ணன் ரவி இந்த படத்தை தயாரித்துள்ளார்.

அதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் தற்போது துபாயிலேயே நடத்துகிறார்கள். மார்ச் 18 ஆம் தேதி மாலை துபாயில் உள்ள தி இந்தியன் ஹை ஸ்கூலில் அமைந்துள்ள ஷேக் ரஷீத் ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

நீண்ட நாளைக்கு பிறகு வெளிநாட்டில் நடைபெறும் தமிழ் பட இசை வெளியீட்டு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments