HomeNewsKollywoodதசரா மூலம் கீர்த்தி சுரேஷுக்கு மீண்டும் தேசிய விருது ; நானி நம்பிக்கை

தசரா மூலம் கீர்த்தி சுரேஷுக்கு மீண்டும் தேசிய விருது ; நானி நம்பிக்கை

தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழில் வெப்பம் என்கிற படத்தில் நேரடியாக நடித்து, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படம் மூலம் இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு அதிக நெருக்கமாகவும் ஆனவர் நடிகர் நானி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான சியாம் சிங்காராய் திரைப்படம் இவருக்கென தமிழகத்தில் உள்ள ரசிகர்களை அதிகப்படுத்தி விட்டது.

இந்த நிலையில் பீரியட் படமாக தமிழ் தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக நானி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தசரா. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர், இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து நானி கூறும்போது, “நிலக்கரி சுரங்க தொழிலாளர்களை மையப்படுத்தி எண்பதுகளில் நிகழும் கதையாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ரொம்பவே அற்புதமாக இருக்கும். இந்த படத்தின் மூலம் மீண்டும் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே தெலுங்கில் உருவான மகாநடி படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகையாக நடிகை கீர்த்தி சுரேஷ்  தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments