HomeNewsKollywoodஉதயநிதியின் கண்ணை நம்பாதே மார்ச் 17 ரிலீஸ்

உதயநிதியின் கண்ணை நம்பாதே மார்ச் 17 ரிலீஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத்தலைவன் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், இனி படங்களில் நடிப்பதில்லை என அறிவித்தார்.

அதேசமயம் இதற்கு முன்னதாக அவர் கண்ணை நம்பாதே மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து வந்தார். அந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கண்ணை நம்பாதே படம் வரும் மார்ச் 17ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருள்நிதி நடிப்பில் உருவான இரவுக்கு ஆயிரம் கண்கள் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் மு.மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆத்மிகா நடிக்க, வசுந்தரா காஷ்யப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ் ஆகியோரும் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது கிரைம் கலந்த ஆக்சன் படமாக இது உருவாகியுள்ளது நன்றாகவே தெரிகிறது.

இந்த டிரைலரிலேயே படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments