HomeNewsKollywoodஇசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற கஸ்டடி படக்குழுவினர்

இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற கஸ்டடி படக்குழுவினர்

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு தெலுங்கில் இருந்து நடிகர் நாகசைதன்யா படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் கஸ்டடி என்கிற படத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்க, கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடித்துள்ள கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் ப்ரியாமணி, அரவிந்த்சாமி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். வழக்கம் போல வெங்கட் பிரபு பாணியில் கமர்சியல் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சீரான இடைவெளியில் நடைபெற்று வந்தது.

கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது கஸ்டடி படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நாகசைதன்யா, வெங்கட் பிரபு, படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன் அவரது ஆசீர்வாதத்தையும் பெற்றுள்ளனர். வரும் ஏப்ரல் 28ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments