V4UMEDIA
HomeNewsKollywoodவேலைக்கு திரும்புகிறேன் ; விஜய் ஆண்டனி வெளியிட்ட உற்சாக தகவல்

வேலைக்கு திரும்புகிறேன் ; விஜய் ஆண்டனி வெளியிட்ட உற்சாக தகவல்

 தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. அதைத் தொடர்ந்து தனக்குள் இருக்கும் நடிப்பு ஆர்வம் உந்தித்தள்ள ஒரு நடிகராக மாறியவர் கடந்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட முன்னணி கதாநாயகன் என்கிற அளவிற்கு உயர்ந்தார்.

அவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவருக்கான ரசிகர்கள் வட்டத்தை இன்னும் விரிவு படுத்தியது.

இந்த நிலையில் அவர் நடிப்பில் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், தமிழரசன் என பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதேசமயம் பிச்சைக்காரன் படத்தில் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்து வந்தார்.

மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒரு சண்டைக் காட்சியை படமாக்கிகிய சமயத்தில் அவர் மிகப்பெரிய விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். பின்னர் சென்னைக்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் விஜய் ஆண்டனி.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஓரளவு குணமடைந்து வருவதாகவும் காயங்கள் கொஞ்சம் அதிகம் தான் என்றும் கூறியிருந்தார் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பு இதயங்களே.. நான் 90% குணமடைந்து விட்டேன் உடைந்த என் தாடை மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்து விட்டன. என்னமோ தெரியவில்லை.. நான் இப்போது முன்பை விட அதிக சந்தோஷத்தை உங்களால் உணர்கிறேன். வரும் ஏப்ரலில் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்.. உங்கள் அன்புக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து திரை உலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments