கடந்த சங்கராந்தி பண்டிகை வெளியீடாக தெலுங்கில் சீனியர் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் நேரடியாக மோதின. சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா படத்தை இயக்குனர் பாபி இயக்கியிருந்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/11/01-chiranjeevi-boss-party-1-1024x577.jpg)
பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ஹா ரெட்டி படத்தை இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களிலுமே ஸ்ருதிஹாசன் தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/gopichand-malineni-3.jpg)
இந்த இரண்டு படங்களையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியைப் பெற்று வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் இந்த இரண்டு படங்களில் வீரசிம்ஹா ரெட்டிக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் வரவேற்பு கிடைத்து வருகிறது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/rajini.jpg)
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் கோபிசந்த் மாலினேனியை தொலைபேசியில் அழைத்து படம் பார்த்து விட்டதாக கூறி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் படம் குறித்து சில விஷயங்களை சிலாகித்து கூறியுள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/01/gopichand-malineni-2-1024x682.jpg)
இந்த தகவலை படத்தின் இயக்குனர் கோபிசந்த் மாலினேனி தெரியப்படுத்தியுள்ளதுடன் இது என்னுடைய வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு அற்புத தருணம். தலைவர் ரஜினிகாந்த்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் வீர சிம்ஹா ரெட்டியை பார்த்து விட்டார். அந்த படத்தை ரொம்பவும் நேசிக்கிறார். அந்த படம் குறித்து அவர் பாராட்டிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றன: என்று கூறியுள்ளார்.