HomeNewsKollywoodவிஜய்யுடன் 3வது முறையாக கைகோர்க்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ

விஜய்யுடன் 3வது முறையாக கைகோர்க்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடிக்கும் 67வது படம் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.லலித்குமார் தயாரிக்கிறார். அவருடன் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யின் இந்த படத்திலும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்துள்ளது.

இந்த படத்தில் இசையமைக்கும் அனிருத் கத்தி, மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக விஜய்யுடன் கை கோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் கவனிக்கின்றனர். படத்தொகுப்பை பிலோமின் ராஜும், கலையை N.சதீஷ்குமாரும், நடனத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments