V4UMEDIA
HomeNewsKollywoodவிக்ரம் பிரபு படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றிய எஸ்பி சினிமாஸ்

விக்ரம் பிரபு படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றிய எஸ்பி சினிமாஸ்

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வருடம் வெளியான டாணாக்காரன் திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாகவும் விமர்சன ரீதியாக வரவேற்பு கொடுத்த படமாகவும் அமைந்தது. அதுமட்டுமல்ல வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்ட, ஜாம்பவான் இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் உருவான,  பொன்னியின் செல்வன் படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது தவிர பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் ரெய்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இந்த நிலையில் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படம் விரைவில் வெளியாவதற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் திரையரங்கு உரிமை மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தற்போது கைப்பற்றி உள்ளது.

இந்த படத்தின் மூலம் கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அது மட்டுமல்ல தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி கவுசுக்காக இந்த படத்தை அவர் தயாரித்தும் உள்ளார்.

கன்னட திரைதுறையின் மிகவும் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன . வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்குத் துறையில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, இயக்குனர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார். கார்த்திக் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார், மேலும் அவரது அடுத்த படம் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.சிவராஜ் குமாருடன் அமையவிருக்கிறது. சிவராஜ் குமார், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Most Popular

Recent Comments