V4UMEDIA
HomeNewsKollywoodகொடுவா படத்திற்காக இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்த நிதின் சத்யா

கொடுவா படத்திற்காக இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்த நிதின் சத்யா

சத்தம் போடாதே’,’சென்னை 28’ உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நிதின்சத்யா சென்னை-28  இரண்டாம் பாகத்திற்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் திரைப்படம் “கொடுவா”. இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் என ஒரு அழுத்தமான ஜனரஞ்சக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது

மிக பரபரப்பான திரைக்கதையுடன் அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சாத்தையா. இப்படத்திற்காக படக்குழு இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றி உண்மையான இறால் வளர்ப்பு பண்ணையில் தங்கி படம் பிடித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகன் நிதின்சத்யா இராமநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார்.

பிக்பாஸ் புகழ் சம்யுக்தா சண்முகம் கதாநாயகியாக நடிக்க இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீஸர் ஆகியவற்றை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஜி வி பிரகாஷ் குமார் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்

Most Popular

Recent Comments