HomeNewsKollywoodசம உரிமை தரவில்லை ; நயன்தாரா வருத்தம்

சம உரிமை தரவில்லை ; நயன்தாரா வருத்தம்

தமிழ் திரை உலகில் கடந்த 18 வருடங்களாக லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழிவுடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. எப்போதும் கதாநாயகியாகவே நடித்து வரும் நயன்தாரா கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாயா என்கிற படத்தில் இயக்குனர் அஸ்வின் சரவணன் டைரக்ஷனில் நடித்தவர், மீண்டும் சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அவருடைய இயக்கத்தில் கனெக்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்த பிரமோஷன் நிகழ்ச்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடியின் நேர்காணலில் கலந்துகொண்ட நயன்தாரா மற்றும் இயக்குனர் அஸ்வின் சரவணன் இருவரும் படம் குறித்து பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

அதே சமயம் நயன்தாரா, தான் நடிக்கும் எந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். இந்த நிலையில் அவரே தயாரித்துள்ள படம் என்பதால் கனெக்ட் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே சமயம் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்த கலந்துரையாடலில் நயன்தாரா கூறும்போது, நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டங்களில் விழாக்களில் கலந்து கொண்டேன். ஆனால் அங்கே பெரும்பாலும் கதாநாயகர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. என்னை ஓரமாக நிற்க வைத்து விட்டார்கள். இதைத்தொடர்ந்து தான் சினிமா விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறேன் என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்

சினிமாவில் இவர் நுழைண்ட புதிதில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். இவருக்கு மட்டுமல்ல பலருக்கும் அப்படித்தான் நடந்திருக்கும்.  ஆனால் இன்று நயன்தாரா ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால் அவர்தான் அந்த நிகழ்ச்சியில் மையப்பொருளாக இருப்பார்.

நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்கள் அனைவரும் அவரைப்பற்றியே தான் பேசுவார்கள் என்பதை நயந்தாரா புரிந்து கொண்டால் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர் தாராளமாக வந்து கலந்து கொள்வதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments