V4UMEDIA
HomeNewsKollywoodஆடியோ கம்பெனி துவங்கிய அந்தோணிதாசன் ; நேரில் வாழ்த்திய சின்னக்குயில் சித்ரா

ஆடியோ கம்பெனி துவங்கிய அந்தோணிதாசன் ; நேரில் வாழ்த்திய சின்னக்குயில் சித்ரா

சசிகுமார் நடித்த கிடாரி படத்தில் இடம்பெற்ற வண்டியில நெல்லு வரும் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சொடக்கு மேல சொடக்கு போடுது உள்ளிட்ட ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பின்னணி பாடகர் அந்தோணி தாசன்.

இந்த நிலையில் தற்போது கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records) என்னும் புதிய ஆடியோ கம்பெனியை தொடங்கியுள்ளார்‌ அந்தோணிதாசன் இதன் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது/

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி சித்ரா கலந்துகொண்டு அந்தோணிதாசன் இந்த முயற்சியை பாராட்டினார் இந்த விழாவில் இயக்குனர் சீனு ராமசாமியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில், “அந்தோணிதாசனின் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன், தான் நடந்து வந்த பாதையை மறக்காமல் தன்னைப்போல கலைஞர்களை கைதூக்கிவிடும் எண்ணம் கொண்டு இந்த நிறுவனத்தை துவங்கியிருப்பது பாராட்டுக்குறியது. எனது ஆதரவு எப்போதும் அந்தோணிதாசனுக்கு உண்டு, அந்தோணிதாசன் மிகப்பிரமாதமான பாடகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தோணி தாசன் பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன் என்று பேசினார்

விழாவில் சின்னக்குயில் சித்ரா பேசுகையில், “அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன். இது ஒரு குடும்ப விழா. இத்தனை பாடகர்களின் குரலைக் கேட்டிருக்கிறேன். இந்த மேடையில் அவர்களை நேராகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

அந்தோணி மிக நல்ல மனிதர், மிக அன்பான மனிதர். தன் குடும்பத்தினரையும் தன்னோடு இருப்பவர்களையும் அவர் அன்போடு கவனித்துக்கொள்ளுவதைப் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். அந்தோணிதாசனின் முயற்சிகள் எல்லாம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று பேசினார்

Most Popular

Recent Comments