HomeNewsKollywoodதங்கர்பச்சான் படத்தில் கதாநாயகியானார் அதிதி பாலன்

தங்கர்பச்சான் படத்தில் கதாநாயகியானார் அதிதி பாலன்

தமிழில் 2017-ல் வெளியான அருவி என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். முதல் படத்திலேயே தனது துணிச்சல் மிகுந்த கதாபாத்திரத்தாலும் நடிப்பாலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற அதிதி பாலன் இந்த ஐந்து வருடங்களில் மிக குறைவான படங்களிலேயே நடித்துள்ளார்.

சமீபத்தில் மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக அவர் நடித்திருந்த படவேட்டு திரைப்படம் வெளியானது. இந்தநிலையில் அவர் இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இயக்குனர் தங்கர்பச்சான் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட உணர்வுபூர்வமான படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர். சமீபத்தில் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி தக்கு முக்கு திக்கு தாளம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இந்தநிலையில் கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் தங்கர்பச்சான். இந்த படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி பாலன் இணைந்துள்ளார்.

இந்த படம் அழகி படம் போல நாயகிக்கு பெயர் வாங்கி தரும் படமாக உருவாகி வருவதால், இந்தப் படம் வெளியான பிறகு அதிதி பாலன் தனக்கான இடத்தை நிச்சயம் பெறுவார் என்று சொல்லப்படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments