HomeNewsKollywoodபத்து வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு திரும்பிய பிரியாமணி

பத்து வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு திரும்பிய பிரியாமணி

பருத்திவீரன் படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. அதைத்தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், மிகப்பெரிய அளவில் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் அவரது திறமைகள் வீணடிக்கப்பட்டது என்றுகூட சொல்லலாம்.

கடைசியாக சாருலதா என்கிற படத்தில் நடித்திருந்த பிரியாமணி தற்போது பத்து வருடங்கள் கழித்து டிஆர் 56 என்கிற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

மருத்துவ மாபியா கும்பலை பற்றி உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறார் பிரியாமணி. சமூகத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் உள்ள படம் என்பதாலும் இந்த படத்தின் கதையை இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா சொன்னபோது இப்படி எல்லாம் நடக்குமா என்கிற ஆச்சரியம் எனக்குள் எழுந்ததாலும் இந்த படத்தில் நடிக்க விரும்பி ஒப்புக் கொண்டேன் என்கிறார் பிரியாமணி

அதுமட்டுமல்ல இந்த படத்தில் எனக்கு சிபிஐ அதிகாரி வேடம். மேலும் என்னுடன் இந்த படத்தில் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

எனக்கு பொதுவாகவே விலங்குகள் என்றால், குறிப்பாக நாய்களை ரொம்ப பிடிக்கும் என்பதால் இந்த படத்தில் நடிப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை தந்தது என்று கூறியுள்ளார் பிரியாமணி.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments