HomeNewsKollywoodகலகத்தலைவன் கொடுத்த வரவேற்பு ; நன்றி சொன்ன ஆரவ்

கலகத்தலைவன் கொடுத்த வரவேற்பு ; நன்றி சொன்ன ஆரவ்

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி தமிழில் துவங்கியபோது அதில் ரசிகர்களுக்கு ஒரு புதுமுக போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின்னராக மாறியவர் நடிகர் ஆரவ். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவுடன் நட்பாக பழகியதன் மூலம் அதிக அளவில் பொதுமக்களை சென்றடைந்தார்.

அதேசமயம் அதை தொடர்ந்த அவரது சினிமா பயணத்தில் அவர் நடித்த சில படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் கதாநாயகன் என்பதைத்தாண்டி சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கலகத்தலைவன் படத்தில் ஹைடெக் வில்லனாக அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ்.

இந்த படம் வெளியானதிலிருந்து ஆரவ்வுக்கு ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தில் நாயகன் உதயநிதி ஸ்டாலின் திரையில் வரும் காட்சிகளை விட அதிக அளவில் வில்லன் ஆரவ் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்.

தனக்கு ரசிகர்களிடமும் பத்திரிக்கை விமர்சகர்களிடமும் கிடைத்துள்ள இந்த வரவேற்பை தொடர்ந்து அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஆரவ்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இவ்வளவு பெரிய வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக உதயநிதி ஸ்டாலின் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் ஒரு ஹீரோ தன்னை விட அதிகமான திரை நேரத்தை தனது சக நடிகருக்கு ஒதுக்கி கொடுப்பது என்பது ரொம்பவே அரிதான ஒன்று. அப்படி ஒரு விஷயத்தை எனக்காக உதயநிதி சார் செய்துள்ளார். அவருடன் இந்தப்படத்தில் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.

அதேபோல இந்த கதாபாத்திரத்தை என்னால் செய்யமுடியும் என நம்பி என்னிடம் ஒப்படைத்த இயக்குனர் மகிழ்திருமேனி, அவரது நம்பிக்கைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அதுமட்டுமல்ல மொத்த படக்குழுவினர், பத்திரிக்கை மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்குமே நீங்கள் என் மீது தொடர்ந்து காட்டிவரும் இந்த அன்புக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஆரவ்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments