HomeNewsKollywoodஓடிடி தளத்தில் வெளியான பரத்தின் நடுவன் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

ஓடிடி தளத்தில் வெளியான பரத்தின் நடுவன் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்

கடந்த செப்டம்பர் மாதம் பரத் நடித்த நடுவன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஷரன் குமார் என்பவர் இயக்கியிருந்த இந்தப்படத்தில் அபர்ணா அபர்ணா வினோத் கதாநாயகியாக நடித்திருந்தார். தரண்குமார் இசையமைத்து இருந்த இந்த படத்தில், சார்லி யோக் ஜேபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதிரடி திருப்பங்களும் அழுத்தமான கதையும் திகில் காட்சிகளுடன் ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வை கொடுத்தது.

இந்த நடுவன் படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தா விட்டாலும், தற்போது இந்த படம், விரைவில் நடைபெற இருக்கும் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஷரன் குமார் கூறும்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகும் இதுபோன்ற விழாக்களில் அதற்கு அங்கீகாரம் பெறுவது எங்களுக்கு படக்குழுவினருக்கு உந்துதலாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படம் சிங்கப்பூர், மலேசியா திரைப்பட விழா, மொராக்கா சர்வதேச திரைப்பட விழா போன்றவற்றில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments