V4UMEDIA
HomeNewsKollywoodமே 2-இல் அடுத்த கட்ட அறிவிப்பை வெளியிடவுள்ள 'குபேரா' படக்குழு!

மே 2-இல் அடுத்த கட்ட அறிவிப்பை வெளியிடவுள்ள ‘குபேரா’ படக்குழு!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘பான் இந்திய’ திரைப்படமாக உருவாகி வருகிறது ‘குபேரா’ திரைப்படம். இது தனுஷின் 51-வது திரைப்படமாகும். தெலுங்கு இயக்குனர் திரு. சேகர் கம்முலா இத்திரைப்படத்தை இயக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும்,’கிங்’நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் தயாரிக்க, சோனாலி நரங் வழங்குகிறார்.

இத்திரைப்படத்திற்கு தேவிஶ்ரீபிரசாத் இசையமைக்க,நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்க, சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் சண்டைக் காட்சிகளை மேற்பார்வையிடுகிறார்.

இந்நிலையில் படத்தின் சுவாரசியமான அடுத்த கட்ட அறிவிப்பு வரும் மே 2-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில் பணக்கட்டுகள் அடுக்கி வைத்துள்ள புகைப்படத்தில் ‘குபேரா’ என்ற படத்தின் தலைப்பை வைத்து இருக்கின்றனர்.படத்தின் டீசர் அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments