V4UMEDIA
HomeNewsKollywood'கேம் சேஞ்சர்' படத்திலிருந்து முதல் பாடல் வரி காணொளி வெளியானது!

‘கேம் சேஞ்சர்’ படத்திலிருந்து முதல் பாடல் வரி காணொளி வெளியானது!

தென்னிந்திய சினிமாவின் முக்கிய அடையாளமாகவும் இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் பிரம்மாண்ட இயக்குனர் திரு.ஷங்கர் அவர்கள் இயக்கத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’.

இத்திரைப்படம் தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் ‘தில்’ராஜு மற்றும் சிரீஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் 50-வது தயாரிப்பாகும்.தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ சிரஞ்சீவியின் மகனும் முன்னணி நடிகர்களில் ஒருவருமான ராம்சரண் அவர்களின் 15 -வது திரைப்படமாகும்.

‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்திலிருந்து ‘ஜரகண்டி’ என்ற முதல் பாடல்வரி காணொளி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி, ஜெயராம், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா,ஸ்ரீகாந்த்,அஞ்சலி,’ஜெயிலர்’சுனில்,நவீன் சந்திரா மற்றும் பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக திருநாவுக்கரசு பணியாற்றுகிறார்.படத் தொகுப்பாளராக ஷமீர் முகமது, கலை இயக்குனராக  அவினாஷ் கொல்லா,சண்டை பயிற்சி இயக்குனராக அன்பறிவு மற்றும் நடன இயக்குனர்களாக பிரபுதேவா ,கணேஷ் ஆச்சார்யா,பிரேம்  ரக்ஷித்,பாஸ்கோ மார்ஷியா,ஜானி,சாண்டி ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.

இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments