V4UMEDIA
HomeNewsKollywoodசிரபுஞ்சி காடுகளில் வேட்டை நாய்களிடம் மாட்டிக்கொண்ட ஆண்ட்ரியா

சிரபுஞ்சி காடுகளில் வேட்டை நாய்களிடம் மாட்டிக்கொண்ட ஆண்ட்ரியா

தமிழில் சயின்ஸ் பிக்சன் படங்கள் குறைவான அளவிலேயே வெளியாகி வருகின்றன. அந்த குறையை போக்கும் விதமாக தற்போது உருவாகி வரும் படம் தான் நோ என்ட்ரி. அழகு கார்த்திக் என்பவர் இயக்கிவரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். மறைந்த நடிகர் பிரதாப் போத்தல் ஆண்ட்ரியாவின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

காணாமல் போன தனது தந்தையைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்  ஆண்ட்ரியா. அவரைப் போலவே ஆராய்ச்சிக்காக இன்னும் பலர் அங்கே வருகின்றனர். அப்போது மரபணு மாற்றப்பட்டு உருவாக்கப்பட்ட நாய்களின் கூட்டத்திடம் ஆண்ட்ரியா மற்றும் சிலர் சிக்கிக் கொள்கின்றனர். இதில் இருந்து அவர்கள் இப்படி தப்பித்தார்கள் ஆண்ட்ரியா அவரது தந்தையை கண்டுபிடித்தார் என்பதை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார்களாம். இதுவரை தமிழ் படங்களில் படப்பிடிப்பு நடத்தப்படாத மேகாலயா, சிரபுஞ்சி ஆகிய பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்களாம்

Most Popular

Recent Comments