V4UMEDIA
HomeNewsKollywoodஜவான் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்த பிரியாமணி 

ஜவான் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்த பிரியாமணி 

பருத்திவீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் செலெக்ட்டிவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் பிரியாமணி. 

இதை அடுத்து தற்போது மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும்  நேரு என்கிற படத்தில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்  பிரியாமணி. தற்போது நடைபெற்ற வரும்  இந்த படத்தின்  படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு அவர் நடித்து வருகிறார் 

Most Popular

Recent Comments