V4UMEDIA
HomeNewsKollywoodஇன்ஸ்டாகிராமில் நுழைந்த முதல் நாளே அலப்பறை கிளப்பிய நயன்தாரா

இன்ஸ்டாகிராமில் நுழைந்த முதல் நாளே அலப்பறை கிளப்பிய நயன்தாரா

நயன்தாராவை பொறுத்தவரை முன்னணி நடிகையாக வலம் வந்தாலும்  பெரிய அளவில்  விளம்பரத்தை  விரும்பியது இல்லை. அதனால் தான் அவர் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கூட  கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.

அதே சமயம் அவரது கணவர் விக்னேஷ் சிவன் தங்களுக்குள் எந்த ஒரு முக்கியமான தருணங்கள் இருந்தாலும் அதை உடனடியாக ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும் ஆவல் கொண்டவர். பொதுவாகவே அவரது சோசியல் மீடியா பக்கத்தில் தான் இவர்களது புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி  வருகின்றன.

இந்த நிலையில் முதன்முறையாக இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் கணக்கு துவங்கி  நுழைந்துள்ளார் நடிகை நயன்தாரா. நுழைந்ததுமே முதல் பதிவாக  தனது இரண்டு குழந்தைகளையும் இரண்டு பக்கம் இடுப்பில் ஏந்தியபடி  ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஹிட்   பாடலான  அலப்பறை கிளப்புறோம் என்கிற   பாடலுக்கு ஆடியபடியே ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை உயிர், உலகம் என்கிற தனது இரண்டு குழந்தைகளின் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டாத  நயன்தாரா இந்த வீடியோ மூலம் முதன்முறையாக தனது குழந்தைகளின் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளார். 

Most Popular

Recent Comments