V4UMEDIA
HomeNewsKollywoodபட ரிலீசுக்கு முன்பே ஜெயிலர் இயக்குனருக்கு சர்ப்ரைஸ் பரிசு வழங்கிய ஜாக்கி ஷெராப்

பட ரிலீசுக்கு முன்பே ஜெயிலர் இயக்குனருக்கு சர்ப்ரைஸ் பரிசு வழங்கிய ஜாக்கி ஷெராப்

குறுகிய காலத்தில் பெறும் மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். நான்காவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது. இதற்கு முந்தைய அவரது வெளியீடான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும், நெல்சன் தான் ஜெயிலர் படத்தை இயக்க வேண்டும் என்பதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் என மற்ற மொழி திரையுலகத்தைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் ஜாக்கி ஷெராப் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார். இதற்கு முன்பும் கோச்சடையான் மற்றும் ஹிந்தியில் சில படங்கள் என ஏற்கனவே ரஜினிகாந்துடன் ஜாக்கி ஷெராப் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படத்தில் பணியாற்றிய போது நெல்சனின் டைரக்சன் பாணி ஜாக்கியை ரொம்பவே கவர்ந்து விட்டது. இதை தொடர்ந்து நெல்சனுக்கு ஒரு விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசளித்துள்ளார் ஜாக்கி ஷெராப். பொதுவாக ஒரு படம் வெளியாகி ஹிட்டான பிறகு படத்தின் இயக்குனருக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அல்லது ஹீரோ ஆகியோர் பைக், கார், வீடு என ஏதாவது பரிசு வழங்குவது வழக்கம்.

ஆனால் ஜெயிலர் படம் வெளியாகும் முன்பே அதன் இயக்குனருக்கு படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் ஒருவர் பரிசு வழங்கியது ஆச்சரியமான விஷயம்தான்.

Most Popular

Recent Comments