HomeNewsKollywoodமின்னல் முரளிக்கும் வீரனுக்கும் சம்பந்தம் இல்லை ; இயக்குனர் பசில் ஜோசப் உறுதி

மின்னல் முரளிக்கும் வீரனுக்கும் சம்பந்தம் இல்லை ; இயக்குனர் பசில் ஜோசப் உறுதி

நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வீரன். மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தில் சூப்பர்மேன் பவர் பெற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.

மின்னல் தாக்கியதன் மூலம் அவருக்கு மிகப்பெரிய சக்தி கிடைக்க அதன் மூலம் சூப்பர் மேனாக அவர் மாறுவதும் அதை தொடர்ந்து நடப்பதும் தான் படத்தின் கதை என்பது டிரைலரிலேயே தெரிய வந்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இதேபோன்று மின்னல் முரளி என்கிற படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இயக்குனர் பஸ்ஸில் ஜோசப் என்பவர் இயக்கிய இந்த படத்தில் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவருமே சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அதில் ஒருவர் நல்லவராகவும் ஒருவர் கெட்டவராகவும் இருந்து அந்த சூப்பர் மேன் பவரை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை மையப்படுத்தி வித்தியாசமாக அந்த படம் உருவாகி இருந்தது.

தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள வீரன் படமும் அதே போன்ற கதை அம்சத்துடனோ அல்லது அதன் ரீமேக் ஆகவோ உருவாகி இருக்கும் என கடந்த சில நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே சரவன் மற்றும் மின்னல் முரளி இயக்குனர் பசில் ஜோசப் இருவரும் ஒரு வீடியோ காலில் பேசுவது போன்றும அதில் பசில் ஜோசப் கூறும்போது மின்னல் முரளிக்கும் வீரன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் வீரன் கதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments