V4UMEDIA
HomeNewsKollywoodஅஞ்சலியின் 50வது படமாக உருவாகும் ஈகை

அஞ்சலியின் 50வது படமாக உருவாகும் ஈகை

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்கிற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அதை தொடர்ந்து வெளியான அங்காடி தெரு திரைப்படம் அஞ்சலியின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியதுடன் அவரது திரையுலக பயணத்தில் தடையின்றி நடைபோட வழி வகுத்து கொடுத்தது.

அந்த வகையில் கடந்த 13 வருடங்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ள அஞ்சலி தற்போது தனது ஐம்பதாவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்போது ஈகை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அசோக் வேலாயுதம் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இது தவிர நடிகை அஞ்சலி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் என்கிற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments