V4UMEDIA
HomeNewsKollywoodசமரன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சரத்குமார்-விதார்த்

சமரன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சரத்குமார்-விதார்த்

இன்றைய தேதியில் தமிழில் வெளியாகும் படங்களில் மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு படத்தின் மூலம் தன் முகத்தை காட்டும் நடிகர் என்றால் அது நிச்சயமாக நடிகர் சரத்குமார் தான். 90களில் ஹீரோவாக நடித்த, அதன் பிறகு சினிமாவை விட்டு பல நடிகர்கள் ஒதுங்கிய நிலையில் சரத்குமார் மட்டும் இப்போதும் திரையுலகத்திலும் ரசிகர்களிடத்திலும் வரவேற்புடன் இருப்பதையே இது காட்டுகிறது.

அந்த வகையில் தற்போது ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் சரத்குமார். அதில் நடிகர் விதார்த் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கும் சமரன் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திருமலை பாலுசாமி என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் இவர்கள் இருவரும் இராணுவ அதிகாரியாகவும் ஐஏஎஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர் இந்த படத்தில் மலையாள நடிகர் ஆர்.நந்தா வில்லனாக நடிக்கிறார்.

மேலும் சிங்கம்புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சமீப நாட்களாக இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் சென்னை மணலியில் படமாக்கப்பட்ட ஆக்சன் காட்சியும் ஒன்று.

Most Popular

Recent Comments