HomeNewsKollywoodகாஷ்மீரில் இருந்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு திரும்பிய சிவகார்த்திகேயன் படக்குழு

காஷ்மீரில் இருந்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு திரும்பிய சிவகார்த்திகேயன் படக்குழு

நடிகர் கமல்ஹாசன் தற்போது தான் நடிக்கும் படங்களை மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு நடிக்கும் படங்களை அவர் தயாரிக்கிறார் என்கிற அறிவிப்பு அடுத்தடுத்து வெளியானது.

இதில் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்றும் அந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார் என்றும் கடந்த வருடமே அறிவிப்பை வெளியிட்டார் கமல். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் துவங்கியது. படத்தின் கதைப்படி இந்த படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம். ஆனால் சமீபத்தில் ஜி 20 மாநாடு நடைபெற இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாகவும் அதற்கான பாதுகாப்பு காரணங்களால் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்து விட்டார்கள் என்பதால் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்திவிட்டு சென்னை திரும்பி உள்ளனர்.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டதை விட தாமதமாகுமா அல்லது அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை செய்து படப்பிடிப்பை நடத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments