HomeNewsKollywoodசாகுந்தலம் படப்பிடிப்பின்போது எலி கடித்து விட்டது ; சமந்தா கலகல பேச்சு

சாகுந்தலம் படப்பிடிப்பின்போது எலி கடித்து விட்டது ; சமந்தா கலகல பேச்சு

பொதுவாக வரலாற்று கதாபாத்திரங்களில், புராண கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒவ்வொரு நடிகருக்குமே ஆர்வம் இருக்கும். அதே சமயம் மக்கள் அனைவருக்குமே, கேள்விப்பட்டு, தாங்களாகவே கற்பனை உருவம் கொடுத்து பழகிப்போன அந்த கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியுமா என்கிற ஒரு தயக்கமும் இருக்கும்.

அப்படி ஒரு தயக்கம் தான் சாகுந்தலம் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சமந்தாவிடமும் ஆரம்பத்தில் இருந்ததாம். பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் உருவாகி பிரமாண்டமான படமாக வெளியாக இருக்கும் படம் சாகுந்தலம்

புராண கதையான சாகுந்தலம் என்கிற இலக்கியத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி வருகிறார் நடிகை சமந்தா.

அப்படி அவர் சமீபத்திய பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றும் கலந்து கொண்டபோது இந்த படத்தில் நடித்த போது தனது ஏற்படுத்த வித்தியாசமான அனுபவத்தை குறித்து பேசினார்.

அந்த வகையில் இந்த படத்தில் நிஜமான எலிகளுடன் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சி இருந்தது என்றும் அப்போது தன்னை நிஜமாகவே ஒரு எலி கடித்து விட்டது என்றும் கூறி கலகலப்பை ஏற்படுத்தினார் சமந்தா.

அதுமட்டுமல்ல இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மலர்களை கைகளில் சூடிக்கொண்டு நடிக்க வேண்டி இருந்தது. அப்படி மலர்களை அணிந்து நடித்தபோது தனது கைகளில் அதன் அச்சு அப்படியே தடமாக பதிந்து விட்டது என்றும் அது மறைவதற்கு நீண்ட நாட்கள் ஆனது என்றும் ஒரு தகவலை கூறியுள்ளார் சமந்தா.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments