V4UMEDIA
HomeNewsKollywoodபிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதை திரைப்படமாக உருவாகிறது

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் சிறுகதை திரைப்படமாக உருவாகிறது

தமிழ் சினிமாவில் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் திரைப்படமாவது அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது. இதில் ஒரு சிலர் நாவலின் சாரம் கெடாமல் அழகாக திரைப்படம் ஆக்கி வெற்றியும் பெறுகின்றனர்.

அந்த வகையில் புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதை தற்போது வெள்ளித்திரையில்  படமாக தயாராகிறது.

நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்.

Most Popular

Recent Comments