V4UMEDIA
HomeNewsKollywoodவடக்கன் தெற்கன் என பிரிக்கவேண்டாம் ; விஜய் ஆண்டனி வேண்டுகோள்  

வடக்கன் தெற்கன் என பிரிக்கவேண்டாம் ; விஜய் ஆண்டனி வேண்டுகோள்  

கடந்த சில வருடங்களாகவே முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலைக்காக படை எடுத்து வருவது அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், உணவகங்கள், ஆகியவற்றில் வட மாநிலத்தவர்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக திருப்பூர், சென்னை போன்ற இடங்களில் இவர்களது எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகம் வட மாநிலத்தவரின் ஆதிக்கத்திற்கு ஆளாகுமோ என்று கூட பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துவரும் நடிகர் விஜய் ஆண்டனி வடக்கர்கள் வருகை பற்றி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும் நம்மைப்போல் தன் குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன் தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலர் விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும் வடக்கிலிருந்து வருபவர்களை எதிர்க்கும் பலரும் விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு தங்களது எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றனர்

Most Popular

Recent Comments