HomeNewsKollywoodதங்கர் பச்சான் பட டப்பிங் பேசுவதில் எஸ்.ஏ சந்திரசேகரன் - பாரதிராஜா மும்முரம்

தங்கர் பச்சான் பட டப்பிங் பேசுவதில் எஸ்.ஏ சந்திரசேகரன் – பாரதிராஜா மும்முரம்

உணர்வு பூர்வமான படங்களை தருவதற்கு பெயர் போனவர் இயக்குனர் தங்கர் பச்சான். அழகி, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என அவரது ஒவ்வொரு படங்களும் மனித உணர்வுகளின் மேல் படமாக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த வருடம் தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக்கி டக்கு முக்கு திக்கு தாளம் என்கிற படத்தை இயக்கினார் தங்கர் பச்சான். அந்த படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில் சூட்டோடு சூடாக கருமேகங்கள் கலைகின்றன என்கிற இன்னொரு புதிய படத்தையும் துவங்கி தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார் தங்கர் பச்சான். இந்த படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

முக்கிய வேலடகளில் இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ சந்திரசேகரன், கௌதம்மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் எஸ்.ஏ சந்திரசேகரனும் பாரதிராஜாவும் இந்த படத்தில் தங்களுக்கான காட்சிகளுக்கு டப்பிங் பேசும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து இவர்கள் மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments